Home தென்னிலங்கைச் செய்திகள் அநுர அரசின் பயணம் தவறெனில் மக்கள் பொங்கியெழுவர் – மைத்திரி எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அநுர அரசின் பயணம் தவறெனில் மக்கள் பொங்கியெழுவர் – மைத்திரி எச்சரிக்கை!

Share
Share

“தேசிய மக்கள் சக்தி அரசின் பயணம் தவறெனில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களே கடந்துள்ளன. எனவே, அரசின் பயணம் சரியா அல்லது தவறா என்பதை ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னரே அறியக்கூடியதாக – உணரக்கூடியதாக இருக்கும்.

பயணம் சரியெனில் மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். தவறான பயணமெனில் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள்.

நாட்டில் இன்னமும் உரிய மாற்றம் இடம்பெறவில்லை என்றே நானும் கருதுகின்றேன். பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. மக்களுக்கு வாழ்வதற்கு கஷ்டமாக உள்ளது.

அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் உரிய மதிப்பாய்வின் பின்னரே அது பற்றி கருத்து வெளியிட முடியும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!

கேகாலையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை, கலிகமுவ பகுதியில்...

இளைஞர்கள் இருவர் வாவியில் மூழ்கி பலி!

வாவியில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டம், உடவளவையில் உள்ள பனாக்கடுவ வாவியில்...