Home தென்னிலங்கைச் செய்திகள் அநுர அரசின் பயணம் தவறெனில் மக்கள் பொங்கியெழுவர் – மைத்திரி எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அநுர அரசின் பயணம் தவறெனில் மக்கள் பொங்கியெழுவர் – மைத்திரி எச்சரிக்கை!

Share
Share

“தேசிய மக்கள் சக்தி அரசின் பயணம் தவறெனில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களே கடந்துள்ளன. எனவே, அரசின் பயணம் சரியா அல்லது தவறா என்பதை ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னரே அறியக்கூடியதாக – உணரக்கூடியதாக இருக்கும்.

பயணம் சரியெனில் மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். தவறான பயணமெனில் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள்.

நாட்டில் இன்னமும் உரிய மாற்றம் இடம்பெறவில்லை என்றே நானும் கருதுகின்றேன். பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. மக்களுக்கு வாழ்வதற்கு கஷ்டமாக உள்ளது.

அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் உரிய மதிப்பாய்வின் பின்னரே அது பற்றி கருத்து வெளியிட முடியும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...